ஒரு நாள் கோவிலிருந்து ப்ரண்டும் நானும் கிளம்பினோம். செருப்புகளை விட்ட இடத்தில் வந்து பார்த்தால்.. ஷாக். இரண்டு பேரின் ஜோடியிலும் ஒவ்வொரு செருப்பை மட்டும் காணவில்லை. யாரோட விளையாட்டா இருக்கும் என்று வெயிட் பண்ணி பார்த்து, கடைசியில் வெறுத்து போய் வெறுங்காலோடு திரும்பினோம்.
இருவருக்கும் ஒத்தை செருப்பு மட்டும் காணாமல் போன காரணம் என்ன என்று யோசித்த போது வந்த குட்டிக் கதை இது :
திருடா 1: கோவில் வாசல்ல செருப்பு எடுக்கிறதுன்னா சும்மா இல்ல மாமு (திருடங்க இப்படித்தானே பேசுவாங்க?)
திருடா 2: ஏம்பா, சதாய்ச்சுக்கிறே?
திருடா 1: பின்ன என்னவாம், வெறுங்கால்ல வரணும். போறப்ப ஒரு ஜோடி மட்டும் லவட்டிக்கிட்டு போவணும்
திருடா 2: ஆமா
திருடா 1: ஒரு நாளைக்கு 2 ஜோடி அடிக்கிறதுக்குள்ள 4 வாட்டி வர போக வேண்டியதா இருக்கு. முட்டி கழண்டுது மாமு
திருடா 2: லூசு இதுக்குதாண்டா என்னை மாதிரி படிச்ச திருடனா இருக்கணுங்கிறது
திருடா 1: என்ன மாமு சொல்ற
திருடா 2: டே, ஒரு ஜோடி செருப்பை ஒரு தடவை அடிக்கிறதுக்கு பதிலா, ரெண்டு ஜோடி செருப்பிலிருந்து ஒத்தை ஒத்தை செருப்பை எடுத்தரணும்
திருடா 1: ரெண்டு ஒத்தை செருப்பை வச்சு என்னாபா பண்ணமுடியும்?
திருடா 2: நாமளும் ஒண்ணும் பண்ணமுடியாது. செருப்பு சொந்தக்காரங்களும் ஒண்ணும் பண்ணமுடியாதுடா
திருடா 1: அட ஆமாப்பா
திருடா 2: கரெக்டா. அப்பால நீ அங்க போனீனா அந்த ரெண்டு ஒத்தை செருப்பையும் தெம்பா லவட்டிட்டு வந்துரலாம்.
திருடா 1: சூப்பருப்பா. இப்ப ரெண்டு ஜோடி செருப்பு நம்மகிட்ட! எப்படி மாமு இப்படி திங்க பண்ற?
திருடா 2: அதுக்குத்தாண்டா படிச்சிருக்கணுங்கிறது. அய்யா 8ஆங் கிளாஸ் பாஸு
திருடா 1: சரிதாம்பா..
திருடா 2: இதைத்தான் கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புங்கிறது
திருடா 1: சென்ற இடமெல்லாம் செருப்புன்னு கூட சொல்லிக்கலாம் மாமு
என்ன நம்ம லாஜிக் சரியா இருக்கா?