Thursday, March 11, 2010
திருடா திருடா..
Wednesday, February 24, 2010
வகுப்பில் ஒரு நாள்

நான் படிச்சது ஒரு பரிசுத்தமான மகளிர் கல்லூரி. ஆண் காக்காய் கூட அந்தப்பக்கம் பறக்காது. கேட்டில் மட்டும் 2 வயதான வாட்ச்மேன்கள் இருப்பார்கள். வாட்ச்வுமன்கள் என்ற வார்த்தை இல்லையென்ற காரணத்துக்காக கூட இருக்கலாம். சரி, கேட்டில் நின்னது போதும். எங்க கிளாசுக்கு போகலாம் வாங்க.
எங்க ஹெச்ஓடி ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்க டிபார்ட்மெண்டே பொண்ணுங்க எல்லாம் கிடுகிடுன்னு நடுங்குவாங்க. மத்த ஸ்டாப்ஸ் எல்லாம் கிடுக்னு நடுங்குவாங்க. அவங்களுக்கு நாங்களா வைத்த பேர் காளியம்மா.
ஒருநாள் காளியம்மா மேனேஜ்மெண்ட் அக்கவுண்ட்ஸ் கிளாஸ் எடுத்திட்டு இருந்தார். அப்போ என் தோழி பிரேமா மிக கவனமாகவும் உன்னிப்பாகவும் போர்ட்டுக்கு மேலேயே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரேமாவின் கண்களைக் கவனித்துவிட்டார். ஆத்தா ஆடிக்கிட்டு இருக்கும்போது மேலே என்ன பராக்கு என்று டென்ஷனாகிவிட்டார்.
ஏ ஜடமே எந்திரி என்றார்
பிரேமா திடுக்குனு எழுந்து நின்றாள்.
இப்ப என்ன கிளாஸ் நடந்துச்சு?
...........
சரி போர்ட்ல இருக்கிறதையாவது எக்ஸ்ப்ளைன் பண்ணு
.....................
சரி எங்க பராக்கு பாத்துட்டு இருந்தே?
......................
சரி கிளாஸை விட்டு வெளிய போ.
பிரேமாவும் போயிட்டாள். கிளாஸ் முடிந்தபிறகே உள்ளே வந்தாள்.
நான் அவளிடம் காளியம்மா கேட்டப்ப எதை பார்த்துட்டு இருந்தேன்னு சொல்லியிருக்கலாமில்லே என்று கேட்டேன்.
அதுக்கு அவள் அதை நான் எப்படி சொல்றது.. நான் பார்த்தது வேற எதுவும் இல்லே. போர்டுக்கு மேலே தொங்கிட்டு இருந்த நம்ம திருவள்ளுவர் போட்டோவைதான் பாத்துட்டு இருந்தேன்
அதை சொல்லித் தொலைய வேண்டியதுதானே?
இல்லடி. நான் வேறொன்னை யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அதை காளியம்மாகிட்ட சொல்லியிருந்தா.. என் தலையவே வாங்கியிருப்பா.
அப்படி என்னடி யோசிச்சே?
போட்டோல இருக்கிற திருவள்ளுவர் இவ்வளவு பெரிய கொண்டை வச்சிருக்கிறாரே.. எப்படி மெயின்டெயின் பண்ணியிருப்பாருன்னு யோசிச்சேன். இதை காளியம்மாகிட்ட சொல்லியிருந்தா என் தலைய திருகியிருப்பா.