
நான் படிச்சது ஒரு பரிசுத்தமான மகளிர் கல்லூரி. ஆண் காக்காய் கூட அந்தப்பக்கம் பறக்காது. கேட்டில் மட்டும் 2 வயதான வாட்ச்மேன்கள் இருப்பார்கள். வாட்ச்வுமன்கள் என்ற வார்த்தை இல்லையென்ற காரணத்துக்காக கூட இருக்கலாம். சரி, கேட்டில் நின்னது போதும். எங்க கிளாசுக்கு போகலாம் வாங்க.
எங்க ஹெச்ஓடி ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்க டிபார்ட்மெண்டே பொண்ணுங்க எல்லாம் கிடுகிடுன்னு நடுங்குவாங்க. மத்த ஸ்டாப்ஸ் எல்லாம் கிடுக்னு நடுங்குவாங்க. அவங்களுக்கு நாங்களா வைத்த பேர் காளியம்மா.
ஒருநாள் காளியம்மா மேனேஜ்மெண்ட் அக்கவுண்ட்ஸ் கிளாஸ் எடுத்திட்டு இருந்தார். அப்போ என் தோழி பிரேமா மிக கவனமாகவும் உன்னிப்பாகவும் போர்ட்டுக்கு மேலேயே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரேமாவின் கண்களைக் கவனித்துவிட்டார். ஆத்தா ஆடிக்கிட்டு இருக்கும்போது மேலே என்ன பராக்கு என்று டென்ஷனாகிவிட்டார்.
ஏ ஜடமே எந்திரி என்றார்
பிரேமா திடுக்குனு எழுந்து நின்றாள்.
இப்ப என்ன கிளாஸ் நடந்துச்சு?
...........
சரி போர்ட்ல இருக்கிறதையாவது எக்ஸ்ப்ளைன் பண்ணு
.....................
சரி எங்க பராக்கு பாத்துட்டு இருந்தே?
......................
சரி கிளாஸை விட்டு வெளிய போ.
பிரேமாவும் போயிட்டாள். கிளாஸ் முடிந்தபிறகே உள்ளே வந்தாள்.
நான் அவளிடம் காளியம்மா கேட்டப்ப எதை பார்த்துட்டு இருந்தேன்னு சொல்லியிருக்கலாமில்லே என்று கேட்டேன்.
அதுக்கு அவள் அதை நான் எப்படி சொல்றது.. நான் பார்த்தது வேற எதுவும் இல்லே. போர்டுக்கு மேலே தொங்கிட்டு இருந்த நம்ம திருவள்ளுவர் போட்டோவைதான் பாத்துட்டு இருந்தேன்
அதை சொல்லித் தொலைய வேண்டியதுதானே?
இல்லடி. நான் வேறொன்னை யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அதை காளியம்மாகிட்ட சொல்லியிருந்தா.. என் தலையவே வாங்கியிருப்பா.
அப்படி என்னடி யோசிச்சே?
போட்டோல இருக்கிற திருவள்ளுவர் இவ்வளவு பெரிய கொண்டை வச்சிருக்கிறாரே.. எப்படி மெயின்டெயின் பண்ணியிருப்பாருன்னு யோசிச்சேன். இதை காளியம்மாகிட்ட சொல்லியிருந்தா என் தலைய திருகியிருப்பா.
14 comments:
ரொம்ப பிரமாதமான, யாருக்கும் வராத சந்தேகம்தான்,,,,
பதிவு அருமை
நல்வாழ்த்துக்கள்.....
கல்லூரி வாழ்க்கை மிகவும் சுவரசியமானது. நாங்கள் இதுபோன்று ஒரு வகுப்பில் சாக்பீஷ் இர ண்டாக்கி தூங்கும் மாணவன் தலையில் எறிந்துவிளையாடுவோம். அவ்வாறு விளையாடும் போது ஒருவன் தலையில் பட்டு ,அவன் பின்புறம் அமர்ந்துஇருந்த மாணவன் வாயில் புகுந்தது . அனைவரும் சிரிக்க ஆசிரியர் அதுவும் அறியாமல் , வாயில் சாக்பிஷ் உள்ள மாணவனை வெளியில் அனுப்பினார். நல்ல பதிவு. என் கல்லூரி நினைவை வெளிபடுத்தியமைக்கு.
எல்லா கல்லூரிகளிலும் ஒரு காளியாத்தா இருக்கிறார் .நல்ல பதிவு
அன்பு அண்ணாமலையாரே,
வருகைக்கு நன்றி.இது என் முதல் பதிவு. முதலில் வந்ததுக்கு மிக்க நன்றி.
உலவு.காம்,
மிக்க மகிழ்ச்சி நன்றி.
காளியம்மா கிட்டே உங்க வலைப்பதிவைக் காட்டினீங்களா? :-))
satyamaa mudiyala
@அனுஷா
மேடம் நான் ஒரு இதழ் துவங்க உள்ளேன். அதை பற்றிய விவரங்கள் http://www.karthikthoughts.co.cc/2010/03/blog-post.html
சேட்டைக்காரன்,
இன்னும் சொல்லலே ஆனாலும் சொல்லமாட்டேன்.
ungal padaipugal en magazineku vendume karthik.lv@gmail.com ennoda emailku contact pannunga..
அனுஷா,
ரொம்ப சுவையான எழுத்து நடை! ரொம்ப ரசித்தேன். வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள். :)
அன்புடன்
அநன்யா
அன்பு அநன்யா,
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. இப்பத்தானே எழுத ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் தொடர்ந்து எழுதுவேன் உங்கள் ஆதரவுடன்.
அன்பு டம்பி மேவீ,
உங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வருக.
Post a Comment